ஆறாம் விரலாய் உன் விரல் பிடித்துக் கொண்டு நடந்தபொழுது வந்ததே தவிர
ஆறாம் அறிவைக் கேட்டுக் கொண்டு வரவில்லை என் காதல் !
ஆறுபிறவி முடிந்திருந்தாலும் உன்னோடு நான் சிநேகிக்கும் விதத்தில் -தோன்றும்
ஆறிலும் நானே உன் துணையாய் இருந்திருக்கக் கூடும் என்று !
ஆறேழு முறை உன்னோடு நிலவும் வானும் ரசித்திருந்தாலும் -வருடம்
ஆறு சென்றபின் நம்வீட்டு நிலாமுற்றத்தில் உன் முத்தம் பெற ஏங்கியிருப்பேன் !
ஆறு மணிக்கெல்லாம் உனது அழைப்பொழிக் கேட்டு விழித்துக் கொள்ளும் என் இதயம்
ஆறு நிமிட உரையாடலுக்குப் பின்னும் உன் அருகாமைக் கேட்டுக் கெஞ்சும் !
அறுபது தாண்டினாலும் நரைத் தொட்டாலும் ஆறாக்காதலுடன் நாமிருக்க மார்ச்சின்
ஆறாம் நாள் வாழ்த்துகிறேன் நெடுங்காலம் நாம் நெருங்கியிருக்க !!!!!!
No comments:
Post a Comment