February 7, 2014

காதல் மலர்ந்த நாள்

இரண்டேழில் பிறந்தாலும் ஏழிரண்டில் மீண்டும் பிறந்தேன் உன்னால் ....

இருவராய் இருந்தோம்

இருவருடம் முன்னால் இதே நாளில் சந்தித்தோம்

ஒருவருடம் முன்னாள் இருவரானோம்

இன்று நாம் மூவராகிவிட்டோம் ....

ஆனால் என் மீது நீ கொண்ட காதலும்

உன் மீது நான் கொண்ட காதலும்

இருவருடத்தில் இருநூறு மடங்காகிவிட்டது போல் உணர்கிறேன் ......

உன்னை முதன் முதலில் சந்தித்த நாளின்று...

காதலுடன் கடற்கரையில் கால் நனைத்து ...

உன் காதலில் நனைந்த நாளின்று....

எனக்குள் நீ காதலனாய் விழுந்த நாளின்று....

வார்த்தைகள் போதவில்லை இந்நாளைப் பற்றி வர்ணிக்க ....