August 12, 2012

ஏழாம் வாழ்த்து


ஏழு கடல் தாண்டி வந்து மணப்பான் எவனோ என சிறு வயதில் கனவுகள் காணுவேன்

ஏழு மணியளவில் கடற்கரையில் நீயிட்ட ஒற்றை முத்தத்தில் நீதான் என்றானாய் !

ஏழு ஜென்மம் உன்னுடன் வாழ வேண்டுமென்று வேண்டப் போவதில்லை நான்

ஏழு நாள் வாழ்ந்தாலும் உன்னுடன்தான் வாழ்ந்திருக்க வேண்டுகிறேன் !

ஏழு நூறு கோடி உலக மக்கள் தொகையில் நான் தேடிய உறவெல்லாம்

ஏழு வண்ண வானவில்லாய் உன்னுருவில் என் கண்முன் காண்கிறேன் !

ஏழாம் மாதம் பிறந்த என்னுள் நாணம் பிறப்பித்த உன்னை மார்ச்சின்

ஏழாம் நாள் வாழ்த்துகிறேன் என்றென்றும் நாம் இணைபிரியாமலிருக்க !!!!!!

No comments:

Post a Comment