September 17, 2011

அந்த ஒரு மணி நேரத்தில்

வார்த்தைகள் பகிர்ந்துக் கொண்ட அந்த புல்வெளியில்...

வானவில்லொன்று உன் கண்ணில் கண்டேன் ...

மழைக்கு ஒதுங்கி உன்னருகே நிற்கையில் ...

உன் பார்வை உரசி மீண்டும் மீண்டும் நனைந்தேன் ...

பிரியாவிடைக் கொடுத்து பேருந்தில் ஏறியவுடன்...

உன் புன்னகையில் இடப்பக்க இதயம் தொலைத்தேன் ...

கடந்து சென்று விட்ட அந்த ஒரு மணி நேரத்தில் ...

நடந்து விட்ட மாற்றங்கள் ஏனோ இன்னும் மறையாமல் ...