கவிதைகளுக்கு கொஞ்ச நாள் ஓய்வு தரலாம் !!!
உயிருள்ள கவிதையொன்றுதான் என்னுடன் வாழப் போகிறதே !!!
கனவுகளுக்கு நிரந்தரமாக விடுமுறை அளிக்கலாம் !!!
இருபத்தியோரு வருட கனவுதான் நினைவாகப் போகிறதே !!!
அலைபேசி அழைப்புகளுக்கு சில நாட்கள் பிரியாவிடை !!!
அலைபேசி அழைப்புகளுக்கு சில நாட்கள் பிரியாவிடை !!!
அழைப்பு விடுத்த அலைபேசிதான் என்னருகிலிருக்கப் போகிறதே !!!
விழியின் தேடல்கள் ஒரு ஓரமாய் சென்று உறங்கலாம் !!!
மின்சாரம் பாய்ச்சக்கூடிய கண்கள்தான் என்னோடு உறங்கப் போகிறதே !!!
ஆம் ! காதலான நீ கணவனாக பரிணாம வளர்ச்சியடையப் போகிறாய் !
என்றென்று ஏங்கிக் கொண்டிருந்த நம் திருமணம் மூன்று நாட்களில் ....
அதனால் , இதுவே காதலியாக உனக்கெழுதும் கடைசி கவிதை !!!