August 12, 2012

ஒன்பதாம் வாழ்த்து



ஒன்பதுத் திங்கள் வித்தியாசம் நமக்குள் , நான் ஜனித்ததும் கருவில் நீ உருக்கொண்டாயோ ?

ஒன்பதாம் வகுப்பு முதல் என்னுள் எழும் ஹார்மோன்களின் கேள்விகளுக்கு 

விடை நீதானோ  ?

ஒன்பதில் எட்டுப்பகுதி மூழ்கிக் கிடக்கும் பனிக்கட்டியாய் என் காதலின் ஆழம் நீ அறிவாயோ ? 

ஒன்பது மாதம் என் இருள்சூழ் கருவறையில் சிறையிருக்கப் போவது 

உன்னுயிர்த் துளிதானோ  ?

ஒன்பதாம் கோளாய் இருந்த நான் வீழ்ந்தின்று செயற்கைகோளாய் உனைச் சுற்றுவதேனோ  ?

ஒன்பது துவாரங்களில் செவியிரண்டு மட்டும் உன் குரல் ரசித்திருக்க 

என்னத்தவம் நோற்றதோ ?

தொண்ணூறு ஆண்டுகளானாலும் தோல்வியின்றி வாழ வாழ்த்துகிறேன் மார்ச்சின் 

ஒன்பதாம் நாள் !! நாம் ஓராயிரம் ஆண்டுகள் பிணைந்திருப்போமென !!!!!!!!!


No comments:

Post a Comment