July 24, 2014

காதலிக்கும் வரம்

தொலைதூரம் இருந்தோம்

இணையும் நாளெண்ணி ஏங்கினோம்

இன்றோ அருகருகே இருக்கிறோம்

ஒரே அறையில் இருக்கிறோம்

ஆனால் அவரவர் அலைபேசியில் லயித்திருக்கிறோம்....

இது திருமணம் தந்த மாற்றமோ ?

இல்லை நம் காதல் தந்த ஏமாற்றமோ ?

வாரம் ஒருமுறை சந்தித்தோம்

மணிக்கணக்கில் பேசினோம்

இன்றோ நொடிக்கொருமுறை சந்திக்கிறோம்

ஒரே வீட்டில் வசிக்கிறோம்

ஆனால் மணிக்கொருமுறைதன் சிரிக்கிறோம்...

இது மணவாழ்வு தந்த மாறுதலோ ?

இல்லை நம் சிநேகத்தில் வந்த குறைதலோ ?

நாம் மீண்டும் காதலர்களாக மாறிட வரம்தான் கிடைக்குமோ ?