தொலைதூரம் இருந்தோம்
இணையும் நாளெண்ணி ஏங்கினோம்
இன்றோ அருகருகே இருக்கிறோம்
ஒரே அறையில் இருக்கிறோம்
ஆனால் அவரவர் அலைபேசியில் லயித்திருக்கிறோம்....
இது திருமணம் தந்த மாற்றமோ ?
இல்லை நம் காதல் தந்த ஏமாற்றமோ ?
வாரம் ஒருமுறை சந்தித்தோம்
மணிக்கணக்கில் பேசினோம்
இன்றோ நொடிக்கொருமுறை சந்திக்கிறோம்
ஒரே வீட்டில் வசிக்கிறோம்
ஆனால் மணிக்கொருமுறைதன் சிரிக்கிறோம்...
இது மணவாழ்வு தந்த மாறுதலோ ?
இல்லை நம் சிநேகத்தில் வந்த குறைதலோ ?
நாம் மீண்டும் காதலர்களாக மாறிட வரம்தான் கிடைக்குமோ ?
இணையும் நாளெண்ணி ஏங்கினோம்
இன்றோ அருகருகே இருக்கிறோம்
ஒரே அறையில் இருக்கிறோம்
ஆனால் அவரவர் அலைபேசியில் லயித்திருக்கிறோம்....
இது திருமணம் தந்த மாற்றமோ ?
இல்லை நம் காதல் தந்த ஏமாற்றமோ ?
வாரம் ஒருமுறை சந்தித்தோம்
மணிக்கணக்கில் பேசினோம்
இன்றோ நொடிக்கொருமுறை சந்திக்கிறோம்
ஒரே வீட்டில் வசிக்கிறோம்
ஆனால் மணிக்கொருமுறைதன் சிரிக்கிறோம்...
இது மணவாழ்வு தந்த மாறுதலோ ?
இல்லை நம் சிநேகத்தில் வந்த குறைதலோ ?
நாம் மீண்டும் காதலர்களாக மாறிட வரம்தான் கிடைக்குமோ ?