நீ அமர்ந்து சென்ற நாற்காலியில்
நாள் முழுதும் அமர்ந்து கனா காண்கிறேன்
உன் மடி சேர்ந்ததாய் எண்ணிக் கொண்டு .....
நீ தீண்டிச் சென்ற இடமெல்லாம்
நானே தீண்டி உணர்விழக்கிறேன்
உன் விரலென்னைத் தொடுவதாய் நினைத்து .....
நீ அனிச்சையாய் நிற்கையில்
நான் பதித்துக் கொண்ட உன் நிழல்படம்
கண்டு நீயென்னை பார்ப்பதாய் நாணுகிறேன் ..... இவ்வாறு
இடையிடையே வரும் பிரிவுகள் உன்னை ஏனோ
இடைவிடாமல் நேசிக்கக் கற்பிக்கறது...