12 ஆகஸ்ட், 2012

மூன்றாம் வாழ்த்து


மூன்றாம் நாளும் நான் சாகரம் விரும்ப நீயோ சிகரமிட்டுச் சென்றாய்

மூன்று உலகமாய்த் தோன்றும் உனையே எனக்குத் தரச்சொல்லி

மூன்று கடவுளரில் ஒருவரைக் கண்டு வேண்டிக்கொண்டேன்

மூவேழு நிமிடங்கள் தாமதமாய் வந்த பேருந்தில் முண்டியடித்து நிற்பினும்

மூவெட்டு நிரம்பிய உன் குறுந்தாடி கைப்பட்டு வானுலவுவதாய் எண்ணம்

மூன்றாம் சந்திப்பின் முடிவில் எனக்குள் காதல்குழந்தை கருவுறத் தொடங்கியது

மூன்று மணி நேரம் நான் உன்னுடன் வாழ்ந்த நிமிடங்கள் போல

முப்பொழுதும் நம் உறவு முடியாமல் நீண்டிருக்க மார்ச்சின்

மூன்றாம் நாள் வாழ்த்துகிறேன் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக