January 26, 2011

கடவுச் சொல்


முதலாமாண்டு

நான் கல்லூரியில் சேர்ந்த நாள் ஞாபகத்தில் இல்லை... ...

உன்னைக் கண்ட நாளை எண்ணி அவ்வப்போது சிரித்திருக்கிறேன் ....

இரண்டாமாண்டு  

உன்னிடம் பிறந்த நாள் வாழ்த்து சொன்னதில்லை....

உன் பிறந்த நாளன்று கடவுளிடம் கோரிக்கைகள் வைத்திருக்கிறேன் ...

மூன்றாமாண்டு 

உன் கைபேசிக்கு குறுஞ்செய்தி தொடுத்ததில்லை....

உன் கைபேசி எண் மட்டும் கண்டுபிடித்து நினைவில்கொண்டிருக்கிறேன்.......

நான்காமாண்டு

கல்லூரி வகுப்பறையில் கடைசி வரிசையில் அமர்ந்ததில்லை ..

முதல் வரிசையிலிருந்து கொண்டு உன்னை முகம் திருப்பி ரசித்திருக்கிறேன்

முதல் நாள் நீ தந்த பார்வை மின்சாரத்தை ஏனோ .....

நான்காண்டு மின்னும் மின்னணுவியலும் கடைசி வரை உணர்த்தவேயில்லை

இன்று

ஆம் !!! நீ கனவு போல் என்னை கடந்து சென்று விட்டாய் ..

கடவுச் சொல் மட்டும் உன் பெயர் சுமந்து கனக்கிறது....

January 22, 2011

தேநீர்

மழை சொட்டும் நேரத்தில்...
சுவாசம் முட்டும் தூரத்தில் ..
நாம் இருவரும் முழுவதும் நனைந்து ..

ரசனையுடன் கவிதைகள் பேசி நடந்து ...
செல்லெல்லாம் சிலிர்த்து ....
வீட்டுக்கு வந்தவுடன் .....
ஒரு ஈர முத்தம் தந்துவிட்டு ..
சூடான தேநீர் கொடுப்பேன்...
நீயோ தேநீர் என்போல் சுவையில்லை என்பாய் ...

இதழின் வரிகளை எண்ணிக் கொண்டே ....

கண்ணாமூச்சி


கனவுகளில் உன்னைக் கண்டால்

கவிதைகளில் நனைகிறது காலை ...

விழிகளால் உன்னைத் தேடினால்

விழாக் கொண்டாடுகிறது என்னுள்ளம் .....

கரங்களால் உன்னைத் தீண்டினால்

கனாக் கோலம் வரைகிறது என் நாணம் ....

காதலைச் சொல்ல நினைத்தால் மட்டும்

ஒளிந்து கொள்கிறது என் குரல் ....


January 17, 2011

உயிர்க்காதல்

ருகாமையில் நீ...
ட்தின்னும் உன் பார்வை ...
தழ்கள் வருடும் உன் விரல்கள் ...
ரம் வற்றாத உன்னுடைய முத்தம் ...
ணர்வுகள் தூண்டும் உந்தன் வாசம் ...
மையாகிப் போகும் எந்தன் வெட்கம் ...
ன்னவென்று புரியாத எல்லையற்ற மோகம்...
தேதோ எண்ணங்கள் தோன்றும் ஏகாந்த நேரம்...
ம்புலனிலும் நிறைந்து நிற்கும் உன்னுயிர்த் தாகம் ...
ன்றாகத் தவிக்கும் இருவேறு இதயங்களின் துடிப்பு...
ராயிரம் கனவுகளோடு உன்னை எதிர்நோக்கியிருக்கும் நான் ...
ஒளடதம் இல்லாத இந்த நோய்க்கு பெயர்தான் உயிர்க்காதலோ ?

January 11, 2011

விண்மீன்

அன்று
மழை பொழிந்து குளிர்ந்த மாலை ...
குடை விடுத்து உன்னுடன் நான் .....
கிளை பிடித்து நீ உலுக்கி மீண்டுமொரு மழை செய்து . ...
விலை இல்லா காதல் சொன்னாய் ...
இன்று
நீல வானம் மொத்தமும் உலுக்கி உன் மீது விண்மீன் உதிர்த்து என் காதல் சொல்கிறேன்.....
நீயோ நான் உதிர்த்த முதல் விண்மீனிடம்...
என்னோடு சேரும் வரம் வேண்டி கண்களை மூடிக் கொண்டாய் .....
காதலைக் காணும் முன்னே....