April 13, 2018

ஆயுதப்படை !

உன் விழியென்ன அகழியோ ? - என்னை

உன் பார்வை முதலைகள் முழுதாக விழுங்குகின்றனவே !

உன் வாசமென்ன நீர்மூழ்கியோ ? - என்

நினைவுக்கடலில் நுழைந்து போர் புரிகிறதே !

உன் குரலென்ன போர்விமானமோ   ? - என்

உறங்கா இரவில் ஓயாமல் ஒலித்துக்கொண்டிருக்கிறதே !

உன் விரலென்ன அணுஆயுதமோ ?- என்

நாணக் குவியல்களை சிதறச் செய்கிறதே !

உன் சுவாசமென்ன ரசாயன ஆயுதமோ ?- என்

உடலினுள் வேதியியல் மாற்றம் நிகழ்த்துகிறதே !




March 7, 2018

மகளிர் !

ழகாக்கி அழகுபார்த்தாள் பாட்டி  !

ளுமைகள்அறிவித்தாள் ஆசிரியை !

னிமையாக்கினாள்  இளைய தங்கை  !

ன்றெடுக்கும் வரம் தந்தாள் மகள் !

தவிகள் செய்தாள் உடன்பிறந்தவள் !

க்கம் ஊட்டினாள்  அக்கா  !

திர்க்கக் கற்றுகொடுத்தாள் சித்தி  !

னென்று கேட்க சொல்லிக்கொடுத்தாள் தோழி !

யங்கள் விளக்கினாள்  அத்தை !

ற்றுமையை உணர்த்தினாள் மாமியார் !

யாமல் உழைத்தாள் அம்மா !

உயிர்பெற்றது முதல் என் உடனிருக்கும் பெண்களுக்கும்

மாதவம் புரிந்து மங்கையராய் மலர்ந்த அனைவருக்கும்

மகளிர்  தின வாழ்த்துக்கள் !




January 11, 2018

காதல் கயிறு !

கனவுத்தொட்டிலில் என்னை உறங்கவைக்கும் 

நீ தூளிக்கயிறு !

காதல் மங்கையாய் என்னைச் சிறகடிக்கவைக்கும் 

நீ ஊஞ்சல்கயிறு  !

மனக்கேணியிலிருந்து கவிதை கிளர்ந்திழுக்கும் 

நீ வாளிக்கயிறு !

இல்லாத அழகை வார்த்தையால் வர்ணிக்கும் 

நீ மணல்கயிறு !

இதயயிரும்பினை உருகாமல் கவர்ந்திழுக்கும் 

நீ காந்தக்கயிறு !

ஓயாமல் வளைக்கரம் பற்றிக்கொள்ளும் 

நீ காப்புக்கயிறு !

லட்சியக்காளையை பிடித்திழுக்க உதவும் 

நீ மூக்கணாங்கயிறு !

வெற்றிகளில் நான் துள்ளும்பொழுது களிக்கும் 

நீ தாண்டும்கயிறு !

சாதனைகள் நான் புரிய சீராய் வழிகாட்டும் 

நீ ஏணிக்கயிறு !

வாழ்வலையில் நம் காதல் தொலையாமல் பேணும் 

நீ தோணிக்கயிறு !

சோகங்களை அன்பால் உலரச்செய்யும் 

நீ கொடிக்கயிறு !

துவளும் பொழுதுகளில் என்னைத் தாங்கும் 

நீ கட்டில்கயிறு !

உடல்மட்டும் என்வசம் விட்டு உயிரை வைத்திருக்கும் 

நீ பாசக்கயிறு !

என்றும் விலகாமல் என்னுடனே இரு !!!





January 7, 2018

பலாப்பிஞ்சு

வேர்ப்பலாவின் வாசத்திற்கு

          வேலிபோட வழியில்லை ......

தன்னையே கனியாக்கி

         மன்னவனை பிணியாக்கினாள் காதலரசி

கண்களையே சுளையாக்கி

          மண்மகனை ஈயாக்கினாள் ....

பருத்த பழமாய் வளர்ந்து 

           பெருத்த இன்பம் கண்டனரிருவரும்

கனிந்ததும் கொய்தனர் காம்புக்கும்

             கனிக்குமுள்ள காதலும்  உடைந்தது ......       

சுளையாய் வாழ்வு சுவையாகும் 

             நாளை என்றெண்ணி

பிஞ்சரிந்து செங்கரத்தால் சமைத்து

             நெஞ்சிணைந்தாள் கற்புக்கரசி

வேர்ப்பலாவின் வாடை

             வெடித்து வருவதைப்போல் வந்தது விதி

தோலாய் வந்த காலனால்

              நூலாய் ஆனால் பாவை ......

பிஞ்சிலே முடிந்த பலாவின்

               எதிர்காலம் போல்.இனிமையறியாமலே போனாள் ......
       
இம்மண்ணில் .....

பிஞ்சுகளை மொய்ப்பாரில்லை ....

சுளைகளை வைப்பாரில்லை .....