October 28, 2012

மின்சாரக் காதல் !


நம் காதல் மின்சாரமானால் .................

ஒருவாரப் பிரிவு நீங்கி சந்திக்கையில் எனை உயிர்பெறச் செய்யும் உன்

அனிச்சைப் புன்னகைதான் மின்மாற்றி !

இமைக்காமல் எனை நோக்கி நொடிப்பொழுதுகளில் என் வார்த்தைகளை 


நிறுத்தும் உன் கண்கள்தான் மின்தடையம் !

விலகாமல் என் விரல்பிடித்து கணப்பொழுதுகளில் என் காதல் பெருகச் 

செய்யும் உன் விரல்கள்தான் மின்தூண்டி !

தற்செயலாய்த் தீண்டிக் கொண்டாலும் உயிரைத் தொடும் வேகத்தில் 

நரம்புகளுக்குள் செல்வதுதான் மின்னோட்டம் !

உனைக் காணாத நாளிலும் உனைப் பற்றிய நினைவுகளை நிறைத்து 

வைத்திருக்கும் என் இதயம்தான் மின்தேக்கி !

மனமுடைந்த பொழுதுகளில் ஆறுதலாய் உன் நெற்றிமுத்தம் எதிர்பார்க்கும் 

என் மனம் சந்திப்பதுதான் மின்னழுத்தம் !

தூரத்தில் இருக்கும் பொழுதிலும் தூக்கமில்லா இரவிலும் உன்னோடு 

இணைக்கும் என் அலைபேசிதான் மின்கடத்தி !



October 11, 2012

கடற்கரை குமளி !!!

கடல்மகள் ஏவாளாய் மாறி உனக்களித்த குமளியோ.. ?
நுரைகள் உணர்த்துவது அவளது அலை முத்தத்தின் ஈரமோ ..?
கடந்து வந்த பாதையை நீ காண மணலும் சுமந்து வந்தாளோ .. ?
நானில்லாத நேரம் உன்னுடன் களவுக்காதல் புரிவது முறையோ .. ?
சுவைத்த பக்கம் நானறியக் கூடாதென்று மறுபக்கத்தை பதித்தாயோ ..?
உன் காதலி நானென்று தெரிந்திருந்தும் உனக்கு பரிசளிப்பது நியாயமோ .. ?
என கேள்விகளால் துடித்து போகிறதென் மனம் இந்த புகைப்படம் கண்டவுடன் 
ஆனாலும் கடலை வெறுப்பதில்லை நம் காதலை தொடக்கி வைத்த காரணத்தால் ..