December 28, 2010

உனக்காக

உள்ளே உன் காதல் என்னை உருக்குலைத்தாலும்
வெளியில் சிரிக்கிறேன் உனக்காக !
நீ வசிப்பதால் இதயம் இருமடங்கு துடித்தாலும்
மௌனம் காக்கிறேன் உனக்காக !
இரவில் உன்னால் உறக்கங்கள் தொலைந்தாலும்
இமைக்காமல் இருக்கிறேன் உனக்காக !
உலகமே இருண்டாலும் உணர்வுகள் இறந்தாலும்
இறுதிவரை இருப்பேன் உனக்காக !
உனக்காக மட்டும் !!!

December 27, 2010

போதும் !

உன் நிழல் நடந்த பாதைகளை நான் கடக்கும்
சிறு வரம் போதும் !
உன் விரல் நனைத்த மழையை நான் தீண்டும்
ஒரு கணம் போதும் !
உன் கால் தழுவிய அலைகளை நான் தொடும்
அந்த நிமிடம் போதும் !
உன் சுவாசம் சுமந்த காற்றை நான் உணரும்
சில நொடிகள் போதும் !
உன்னோடு வாழ்ந்ததாய் நான் எண்ணிக் கொள்ள..


முத்தம்

சத்தமின்றி சயனித்திருந்த என் மனதில்
நித்தமும் ஒரு யுத்தம் செய்யச்
சித்தம் கொண்டு அந்த
முத்தத்தைத் தந்தாயோ கனவில் 
இன்னும் முழுதாய் மீளவில்லை நான்
உன் மூச்சுக் காற்றிலிருந்து ......

December 12, 2010

காதலன்

என் கனவுகளைச் செதுக்கினாய்
உன்னைச் சிற்பி என்றெண்ணினேன்......
என் இதயத்தைத் திருடிக் கொண்டாய்
உன்னைக் கள்வன் என்றெண்ணினேன் .....
என் கவிதைகளுக்கு உயிர் கொடுத்தாய்
உன்னைக் கவிஞன் என்றெண்ணினேன் ....
என் இரவுகளுக்கு ஒளியூட்டினாய்
உன்னைக் கலைஞன் என்றெண்ணினேன் ....
என் காதல் மட்டும் உனக்குப் புரிவதில்லை
ஆனாலும்
உன்னைக் காதலனாகவே எண்ணுகிறேன் !!!!!

December 11, 2010

காலம்

உன்னைச் சந்தித்தபொழுது வசந்த காலத்தை உணர்ந்தேன் !!!
உன்னை நினைத்தபொழுது இளவேனில் காலத்தை உணர்ந்தேன் !!!
உன்னைச் சேர்ந்தபொழுது மழைக் காலத்தை உணர்ந்தேன் !!!
உன்னுடன் உறங்கியபொழுது குளிர் காலத்தை உணர்ந்தேன் !!!
உன்னுடன் ஊடல் கொண்டபொழுது வெயில் காலத்தை உணர்ந்தேன் !!!
உன் பிரிவில் இன்று இலையுதிர் காலத்தை உணர்கிறேன் !!!
ஆனால் உதிர்வதோ என் இதயம் !!!

December 5, 2010

தேடல்!!!

இதயம் தேடிய உன் காதல் ...
விழிகள் தேடிய உன் முகம் ...
இமைகள் தேடிய உன் கனவு ...
விரல்கள் தேடிய உன் தேகம் ...
இதழ்கள் தேடிய உன் முத்தம் ...
இரவுகள் தேடிய உன் உணர்வு...
தோள்கள் தேடிய உன் தொடுதல் ...
நீ கொடுத்ததோ உள்ளம் தேடாத உன் பிரிவு .....!!!!!


December 4, 2010

பாறை

நீ பனியாய் உறைந்திருந்தால் நான் பாறையாக இருப்பேன் ........
என்னை மூடிக்கொள் ....
நீ அருவியாய் எழுந்திருந்தால் நான் பாறையாக இருப்பேன் .......
என்னை தழுவிக்கொள் ....
நீ நதியாய் நிறைந்திருந்தால் நான் பாறையாக இருப்பேன் .......
என்னை உரசிக்கொள் ...
நீ கடலாய் விரிந்திருந்தால் நான் பாறையாக இருப்பேன் .......
என்னை முத்தமிட்டுக்கொள்.....
நீ காற்றாய் கரைந்திருந்தால் நான் பாறையாக இருப்பேன் .......
என்னை மோதிக்கொள் .....
நீ உருக்கொண்டு மானுடனானால் நான் பாறையாக இருப்பேன் .......
என்னில் சாய்ந்துக்கொள் .....
உன்னுடைய ஒவ்வொரு உயிர்ப்பிலும் உன்னோடு உயிர்க்கத் துடிக்கும் பாறை பிரிதல்ல......
உன் காதல் கிடைக்காமல் இறுகிப்போன என் இதயம்தான் !!!!!

December 1, 2010

மரம்

உதிர்வதற்கு நான் இலையல்ல.......
உலர்வதற்கு நான் மலரல்ல .......
உடைவதற்கு நான் கிளையல்ல.......
உன்னில் உயிரூட்டிக் கொண்டிருக்கும் வேர் .......
ஆனால் என் காதல் புரியாத நீ ஒரு மரம் ....

November 23, 2010

கொள் இல்லை கொல்


என் காதல் இறக்கப்போவது உறுதி .....ஆனால் அது
உனக்கே உரியது என்று புரிந்து கொள் !
என் இதயம் இறுகப்போவது நிஜம் ........ஆனால் அது
உன்னால் என்று அறிந்து கொள் !
என் ஆசை மறையப்போவது உண்மை .....ஆனால் அது
உன்மேல் கொண்டது என்று தெரிந்து கொள் !
என் உணர்வுகள் உதிரப்போவது தெரிந்ததுதான் .... ஆனால் அது
உனக்காக என்று உணர்ந்து கொள் !

பிரியாவிடை

உன்னை மறந்துவிட எண்ணி என் மனதிற்கு விடைகொடுத்தேன் !
என் காதலை எரித்துவிட எண்ணி என் எண்ணங்களுக்கு விடைகொடுத்தேன் !
உன்னில் உருவான நேசத்தை உதறிவிட எண்ணி என் உணர்வுகளுக்கு விடைகொடுத்தேன் !
என் கனவுகளைக் கலைத்துவிட எண்ணி என் கண்களுக்கு விடைகொடுத்தேன் !
உன் நினைவுகளை நீக்கிவிட எண்ணி என் கவிதைகளுக்கு விடைகொடுத்தேன் !
காதலுக்குக் கைக்கொடுத்த கருவியெல்லாம் காற்றில் கரைந்துவிட்ட பின் ........
இதயம் இல்லாத நான் இறுதி வரை எதற்காக?
என் உயிருக்கும் இன்றே விடை கொடுக்கிறேன் ................
நீ உரைத்தால் ..................

November 19, 2010

உன் விழி

உன் விழி என்னை ஊடுருவியபொழுது ...............


இசைத்துக் கொண்டிருந்த என் இதயம்

தன் அசைவை நிறுத்தியது

இமைத்துக் கொண்டிருந்த என் கண்கள்

தன் தவிப்பை நிறுத்தியது

இயங்கிக் கொண்டிருந்த மூளை

தன் உணர்வை இழந்தது

ஆனால்

இளைப்பாறிக் கொண்டிருந்த என் காதல் மட்டும்

மீண்டும் துளிர்த்தது.......