உள்ளே உன் காதல் என்னை உருக்குலைத்தாலும்
வெளியில் சிரிக்கிறேன் உனக்காக !
நீ வசிப்பதால் இதயம் இருமடங்கு துடித்தாலும்
மௌனம் காக்கிறேன் உனக்காக !
இரவில் உன்னால் உறக்கங்கள் தொலைந்தாலும்
இமைக்காமல் இருக்கிறேன் உனக்காக !
உலகமே இருண்டாலும் உணர்வுகள் இறந்தாலும்
இறுதிவரை இருப்பேன் உனக்காக !
உனக்காக மட்டும் !!!