கனவுகளை காப்பாற்ற காலத்தை தியாகம் செய்கிறேன்
நானும் தியாகிதான் !!!
இலட்சியத்தை அடைந்திட உள்மனதோடு போராடுகிறேன்
நானும் போராளிதான் !!!
பிறரின் கேலிகளையும் கேள்விகளையும் அமைதியாய்
கையாள்கிறேன்
நானும் காந்தியவாதிதான் !!!
பெண்ணானதால் பெற்ற சுதந்திரத்தில் பாதிதான் அனுபவிக்கிறேன்
அதனால் தானோ என்னவோ
எனக்குள் சுதந்திர தாகம் இன்னும் தணியவேயில்லை !!!