மார்கழி இரவில் உரசும் நம் ஸ்பரிசங்களால் வெம்மையாகும் சூழ்நிலை
சித்திரை மாத வெயிலையும் மிஞ்சுகிறது !
மார்கழி மாலையில் திணறும் என் சுவாசம்
வைகாசி முதல் நாம் ஒன்றாய் சுவாசிப்பதை நினைவூட்டுகிறது !
மார்கழி மாதத்து பனியை சுமந்திருக்கும் புல்லின் நுனி
ஆனி மாதம் நான் சுமக்க ஆரம்பித்த நம் கருவின் தூய்மை சொல்கிறது !
மார்கழியின் சற்றே வெம்மையான பகல்பொழுதுகள்
ஆடியில் நான் நீயின்றி வாடியதை உணர்த்துகிறது !
மார்கழி குளிரிலும் ஓயாமல் கேட்கும் கடலலைகளின் சப்தம்
ஐப்பசியில் நம் தலை தீபாவளி பட்டாசுகள் போல் தோன்றுகிறது !
மார்கழி மாதத்து தண்மையில் நடுங்கும் தேகத்தை காக்கும் போர்வை
கார்த்திகையில் என் பரீட்சை பயத்தை அணைத்து தேற்றிய உன் கரங்கள் !
மார்கழியும் மார்கழி குளிரும் எனக்கு புதிதில்லை ஆனால் இந்த
மார்கழி நம் காதலை வலுப்படுத்தவே உருவானதாய் எண்ணுகிறேன் !
மார்கழி அதிகாலை நேரங்களில் கோவில்களில் கேட்கும் பாடல்கள்
தை மாதத்தில் நீ உரைத்த காதலைப் போல் தெய்வீகமாய் கேட்கிறது !
மார்கழித் திங்களில் பூக்கும் மார்கழிப்பூவின் நறுமணம்
மாசியில் சம்மதம் பெற்ற நம் காதலைப் போல் இளமையாய் இருக்கிறது !
மார்கழி மாத பனிப்படலத்தைத் தாண்டி உலகில் பிரவேசிக்கும் இளங்கதிர்
பங்குனியில் நமக்கு பிறக்கப் போகும் குழந்தையைப் போல் உதிக்கிறது !
சித்திரை மாத வெயிலையும் மிஞ்சுகிறது !
மார்கழி மாலையில் திணறும் என் சுவாசம்
வைகாசி முதல் நாம் ஒன்றாய் சுவாசிப்பதை நினைவூட்டுகிறது !
மார்கழி மாதத்து பனியை சுமந்திருக்கும் புல்லின் நுனி
ஆனி மாதம் நான் சுமக்க ஆரம்பித்த நம் கருவின் தூய்மை சொல்கிறது !
மார்கழியின் சற்றே வெம்மையான பகல்பொழுதுகள்
ஆடியில் நான் நீயின்றி வாடியதை உணர்த்துகிறது !
மார்கழியில் வீட்டு வாசல்களை அலங்கரிக்கும் கோலங்கள்
ஆவணியில் நாம் சென்ற கடற்கரையின் வண்ணமாக விரிகிறது !
மார்கழியில் குளிர்ந்திருக்கும் நீரைத் தொடும்பொழுது
புரட்டாசியில் நம்மை இணைத்துவைத்த மழைக்காலம் ஞாபகம் வருகிறது !
புரட்டாசியில் நம்மை இணைத்துவைத்த மழைக்காலம் ஞாபகம் வருகிறது !
ஐப்பசியில் நம் தலை தீபாவளி பட்டாசுகள் போல் தோன்றுகிறது !
மார்கழி மாதத்து தண்மையில் நடுங்கும் தேகத்தை காக்கும் போர்வை
கார்த்திகையில் என் பரீட்சை பயத்தை அணைத்து தேற்றிய உன் கரங்கள் !
மார்கழியும் மார்கழி குளிரும் எனக்கு புதிதில்லை ஆனால் இந்த
மார்கழி நம் காதலை வலுப்படுத்தவே உருவானதாய் எண்ணுகிறேன் !
தை மாதத்தில் நீ உரைத்த காதலைப் போல் தெய்வீகமாய் கேட்கிறது !
மார்கழித் திங்களில் பூக்கும் மார்கழிப்பூவின் நறுமணம்
மாசியில் சம்மதம் பெற்ற நம் காதலைப் போல் இளமையாய் இருக்கிறது !
மார்கழி மாத பனிப்படலத்தைத் தாண்டி உலகில் பிரவேசிக்கும் இளங்கதிர்
பங்குனியில் நமக்கு பிறக்கப் போகும் குழந்தையைப் போல் உதிக்கிறது !