August 15, 2011

ம்ம்ம்ம் !!!!!


உனக்கு பிடித்த அந்த ஒற்றை வார்த்தை...

நீ உதிர்க்கும் பொழுது அது சிறுகவிதை ...

உன் கவிதையோடு தொடங்கும் என் இரவு ...

என் கனவினூடே தொடரும் நம் உறவு ....

தடம் மாறும் இந்த கவிதை ..

உனக்காக அல்ல... எனக்காக...

August 14, 2011

இந்தியர் நாங்கள் !!!


ஒன்றுபட்டு நாங்கள் வீழ்ந்திடாது வாழ்ந்திடுவோம் ......
இரண்டில் ஒன்று பார்த்திடுவோம் எல்லைப்போர்களை....
மூன்று நிறக் கொடியில் வெண்மை எங்கள் மனத்தின் நிறம் ....
நான்கு திசைகளும் வியக்க  ஒற்றுமை ராகம் இசைத்திடுவோம்....
ஐந்து புலன்களையும் இந்தியத்  திருநாட்டிற்கு அற்பணித்திடுவோம்...
ஆறாம் அறிவுக்கு எட்டாத கல்வியையும் கலைகளையும் கற்றிடுவோம்...
ஏழாம் பிறவியெடுத்தாலும் இந்தியநாட்டில் பிறந்திடவே விழைந்திடுவோம் .....
எட்டாவதாக ஒரு கண்டம் அமைத்து இந்தியர்கள் மட்டும் அங்கு குடிபுகுவோம்...
ஒன்பது கோள்களை வணங்கவும் செய்வோம் அவற்றின் இயக்கமும் அறிவோம் ...
பத்தாம் கோளொன்றில் புதிதாய் பாதம் பதித்து அங்கும் பசுமைப்புரட்சி செய்வோம்...  
  

August 7, 2011

நட்பு !

வாழ்வென்னும் பெருமழையில் ....

வானவில்லாய் என் கனவு ...

கருமேகமாய் என் துயரம் ...

துளிகளாய் என் ஆசை...

மின்னலாய் நம் உறவு ...

இடியாய் நம் பிரிவு ...

ஆனால் அத்தனையும் மறந்தேன் ...

குடையாய் வந்த உன் நண்பர்கள் தின வாழ்த்தில் ...

August 6, 2011

காணவில்லை !!!

வலக்கையால் கவிதைகளைக் கிறுக்கிக் கொண்டே ...
தற்செயலாய் இடக்கையைப் பார்க்கின்றேன்..
கிறுக்கலாய்த் தோன்றும் கைரேகையில்..
காதல் ரேகையைக்  காணவில்லை !!!


August 2, 2011

தூக்கம்


தூக்கம் இல்லாமல் தவிக்கும் தேர்வுக்கு முதல் நாள்

தூக்கம் தொலைந்த இரவில் ஒலிக்கும் தூரத்து இசை


தூக்கம் கலைக்கும் விதமாக வரும் வினோதக் கனவு

தூக்கம் இல்லா கடலுக்கு துணைசெல்லும் கலங்கரை

தூக்கம் வந்தாலும் சமாளிக்க வேண்டிய ஆசிரியர் உரை

தூக்கம் வரச் செய்யும் பேருந்தும் ஜன்னலோரக் காற்றும்

தூக்கம் வர கையகப் படுத்திக் கொள்ளும் 400 பக்க நாவல் 

தூக்கம் தேடும் குழந்தைக்கு பரிசாகக் கிடைக்கும் தாலாட்டு

தூக்கக் கலக்கத்தில் தோன்றுகின்ற அரைப்பக்க கவிதை

அத்தனையும் நீயாகிப் போனாயடா .......

இனி நான் எங்ஙனம் தூங்குவேன் ?