January 27, 2014

காதல் மிகுதி

காதலிக்கும் பொழுதுகளில்  அலங்காரம் செய்து வந்து

உன் கருத்தை எதிர்கொண்டு நிற்பேன்....

பல நேரங்களில் ஏமாற்றமே மிஞ்சும்...

உனக்கு ரசனை குறைவென்று நினைப்பேன் ...

திருமணத்திற்கு பிறகு இன்று

காலை விழித்தவுடன் தூக்ககலக்கத்தில் அலங்காரமேதுமின்றி

உன்னருகில் வந்த பொழுது

"நீ அழகாய் இருக்கிறாய் "என்று கூறினாய்....

இரு வருட எதிர்பார்ப்பை ஒரு நொடியில் தந்தாய் ....

இன்றுதான் புரிகிறது

உனக்கு ரசனை குறைவு ஆனால் என் மீது காதல் மிகுதியென்று  ........