August 16, 2017

மனதில் ஒரு மழைக்காலம் !

வானமும்  இருண்டது வனமும் இருண்டது

என்னறை மட்டும் இருளவில்லை

உன்நினைவு போல் மேகத்திற்கு இருளூட்டத் தெரியாதோ !

கொடியும்  சிலிர்த்தது மலரும்  சிலிர்த்தது

என்னுடல் மட்டும் சிலிர்க்கவில்லை

உன்விரல்போல் காற்றுக்கு சிலிர்ப்பூட்டத்  தெரியாதோ !

குடையும் நனைந்தது  உடையும் நனைந்தது

நான் மட்டும் நனையவில்லை

உன்முத்தம் போல்  மழைக்கு  நனைக்கத்  தெரியாதோ !

குளமும் நிரம்பியது குறுநதியும் நிரம்பியது

என் மனம் மட்டும் நிறையவில்லை

உன்விழிபோல் வெள்ளத்திற்கு நிரப்பத்  தெரியாதோ !

மரமும் சாய்ந்தது  சாதகப்பலகையும்  சாய்ந்தது

என்மனம் மட்டும் சாயவில்லை

உன்குரல்போல் நீருக்கு என்னை சாய்க்கத்  தெரியாதோ !

ஊருக்கெல்லம் ஒரேயொரு மழைக்காலம் -

உன்னால் தினம் தினம் என் மனம் காணும்  மழைக்காலம் !!!

August 15, 2017

விந்தை மனிதர்கள் -4

ம்மிரண்டு இதயங்களும் இணைந்த 

நாலைந்து வருடங்கள் பின்சென்று 

நினைவில் நின்றிருக்கும் நிமிடமெல்லாம் 

நீங்காமல் எண்ணி பார்க்கிறேன்  

நுணுக்கங்கள் பல கையாண்டு 

நூலிழையில் எனை உன்வசம் சாய்த்து 

நெடியதொரு பெருமுத்தம் இழைத்து 

நேற்றும் இன்றும் மறக்கச் செய்தாய்  

நைல் நதியின் பெருக்கை  மிஞ்சும் உன் வேகத்தால் 

நொடிப் பொழுதும் நீங்காமல் காதல் 

நோய் கொண்டு சுற்றினாய் - 

இன்று காதலும் இல்லை நோதலும் இல்லை !!!

அடிக்கடி  இயல்பை மாற்றி கொள்ளும் நீயும் 

விந்தை மனிதன்தான் !!!