வானமும் இருண்டது வனமும் இருண்டது
என்னறை மட்டும் இருளவில்லை
உன்நினைவு போல் மேகத்திற்கு இருளூட்டத் தெரியாதோ !
கொடியும் சிலிர்த்தது மலரும் சிலிர்த்தது
என்னுடல் மட்டும் சிலிர்க்கவில்லை
உன்விரல்போல் காற்றுக்கு சிலிர்ப்பூட்டத் தெரியாதோ !
குடையும் நனைந்தது உடையும் நனைந்தது
நான் மட்டும் நனையவில்லை
உன்முத்தம் போல் மழைக்கு நனைக்கத் தெரியாதோ !
குளமும் நிரம்பியது குறுநதியும் நிரம்பியது
என் மனம் மட்டும் நிறையவில்லை
உன்விழிபோல் வெள்ளத்திற்கு நிரப்பத் தெரியாதோ !
மரமும் சாய்ந்தது சாதகப்பலகையும் சாய்ந்தது
என்மனம் மட்டும் சாயவில்லை
உன்குரல்போல் நீருக்கு என்னை சாய்க்கத் தெரியாதோ !
ஊருக்கெல்லம் ஒரேயொரு மழைக்காலம் -
உன்னால் தினம் தினம் என் மனம் காணும் மழைக்காலம் !!!
என்னறை மட்டும் இருளவில்லை
உன்நினைவு போல் மேகத்திற்கு இருளூட்டத் தெரியாதோ !
கொடியும் சிலிர்த்தது மலரும் சிலிர்த்தது
என்னுடல் மட்டும் சிலிர்க்கவில்லை
உன்விரல்போல் காற்றுக்கு சிலிர்ப்பூட்டத் தெரியாதோ !
நான் மட்டும் நனையவில்லை
உன்முத்தம் போல் மழைக்கு நனைக்கத் தெரியாதோ !
குளமும் நிரம்பியது குறுநதியும் நிரம்பியது
என் மனம் மட்டும் நிறையவில்லை
உன்விழிபோல் வெள்ளத்திற்கு நிரப்பத் தெரியாதோ !
மரமும் சாய்ந்தது சாதகப்பலகையும் சாய்ந்தது
என்மனம் மட்டும் சாயவில்லை
உன்குரல்போல் நீருக்கு என்னை சாய்க்கத் தெரியாதோ !
ஊருக்கெல்லம் ஒரேயொரு மழைக்காலம் -
உன்னால் தினம் தினம் என் மனம் காணும் மழைக்காலம் !!!