நான்காம் நாள் இணைவு ஒரு அத்தியாயமாய் தொடங்கியது
நான்காம் சாமம் தொடர்ந்த அந்த இரவின் இளமை அன்றே விளங்கியது
நான்கு திசைகளும் காதல் ராகம் இசைத்துக் கொண்டு நம்மை ரசித்திருந்தது
நான்கு புலன்களும் ஓய்வெடுக்க நமதிருவரின் விழிகள் மட்டும் உரசியிருந்தது
நான்கு அறைகள் கொண்ட இதயத்தில் ஐந்தாவதாய் ஒரு காதல் அறை திறந்திருந்தது
நான்கு மாத பிள்ளையாய் என் பெண்மை உன் இடைதொடலில் திமிறிக் கொண்டிருந்தது
நான்கு மணியானதும் உன் வாலிபம் உன்னை விரட்ட நம் நட்போ அதைத் தடுத்திருந்தது
நான்கு முறை தனியாய்க் கைசேர்த்து நடந்ததில் காற்றிலும் கூட மின்சாரம் பாய்ந்திருந்தது
நான்கு பாதங்களும் பதித்திருந்த சுவடுகளில் வீதிகளும் விழாக்கோலம் கண்டிருந்தது
நான்கு எழுத்து காதலனாய் இந்தக் காதலியோடு என்றும் கனவுகளில் கூட
பிரியாமல் காதலித்திருக்க
மார்ச்சின் நான்காம் நாள் வாழ்த்துகிறேன் !!!
No comments:
Post a Comment