ஜில்லென்ற காற்றில் காதோரம் தவழும் கற்றைமுடி ஒதுக்கி
எனக்கு மட்டும் கேட்கும்படி நீயுரைக்கும் " ஐ லவ் யூ "
வேண்டும்!!!
சூடான கடற்கரைமணலில் நிழல் தேடி அருகருகே அமர்ந்து
கரங்கள் பற்றி விழிகள் பார்த்து நீவிளிக்கும் என்பெயர் வேண்டும்!!!
லேசான தூரலில் மரங்களடர்ந்த சாலையில் ஒற்றைக் குடைக்குள்
விரல்களுக்குள் புதைந்து வெப்பமூட்டும் உன் விரல்கள் வேண்டும்!!!
முடியாத பகலும் தொடங்காத இரவும் இணையும் தருணமதில்
என் மடி சாய்ந்து நீயிருக்க நானுன் தலை கோதும் கணம் வேண்டும்!!!
உன் பிறந்தநாளுக்கு நான் என்ன செய்யவென்று எனையே கேட்கும்
நீதானடா எனக்கு கிடைத்த விலையில்லா பரிசு !!!