12 ஆகஸ்ட், 2012

ஐந்தாம் வாழ்த்து


ஐந்தாம் வகுப்போடு முடிந்த நம் பள்ளிப் பயணத்தின் நினைவுகள் இன்னும் வண்ணத்தோடு

ஐந்தறிவுகள் போதும் நீ என் வசமெனில் என கனவு வளர்த்துக்கொள்கிறேன் திண்ணத்தோடு

ஐந்திணைகளில் கூடலும் கூடல் நிமித்தமுமான குறிஞ்சி மட்டும் நம்  எண்ணத்தோடு

ஐம்பூதங்களில் ஒன்றானாலும் காற்றுக்கு கூட இடமில்லை நம்மிடையான உறவில்

ஐந்திலக்கணம் கொண்டுலாவும் தமிழினும் இனியதாகும் பார்வைகள் உன் விழியில்

ஐவிரல் கோத்து ஆதரவாய்த் தோள் சேர்த்து துயர்கள் துடைத்திடுவாய் உன் பரிவில்

ஐம்பொறிகளும் அணைக்கத் துடிக்கும் காதலனாக பரிணாம வளர்ச்சி அடைந்த நண்பனே

ஐந்தடி என்னை காதலால் ஆட்கொண்டு விட்ட நீ நீடூழி வாழ்கவென மார்ச்சின்

ஐந்தாம் நாள் வாழ்த்துகிறேன் நாம் என்றென்றும் கலந்திருக்க !!!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக