உன் விழி என்னை ஊடுருவியபொழுது ...............
இசைத்துக் கொண்டிருந்த என் இதயம்
தன் அசைவை நிறுத்தியது
இமைத்துக் கொண்டிருந்த என் கண்கள்
தன் தவிப்பை நிறுத்தியது
இயங்கிக் கொண்டிருந்த மூளை
தன் உணர்வை இழந்தது
ஆனால்
இளைப்பாறிக் கொண்டிருந்த என் காதல் மட்டும்
மீண்டும் துளிர்த்தது.......
No comments:
Post a Comment