நாடிமானியாய் மாறி இதயத்தொனிகள் தேடும் உன் விரல்களுக்கு
தெரியாதோ இதயம் இடப்பக்கம் என்று ...
நாணுமென்னை மிச்சமின்றித் தின்று உயிர்தேடும் உன் விழிகளுக்கு
தெரியாதோ உயிர் உன்வசமென்று ....
இடைவிடாமல் தொட்டிருக்க என் குரல் எதிர்பார்க்கும் உன் செவிகளுக்கு
தெரியாதோ உணர்கையில் நான் ஊமையென்று...
என் பெண்மையின் தண்மையெல்லாம் வெம்மையாக்கும் உன் சுவாசத்திற்கு
தெரியாதோ இடைவெளிகள் இம்சிக்குமென்று ....
முதலிரண்டு முடிந்தும் மூன்றாமுறையாய் முத்தம் கேட்கும் உன் இதழ்களுக்கு
தெரியாதோ இரவென் துயில் கெடுமென்று ....
எனதைப் போலவே உன் ஐம்புலன்களும் அறிவிலிகள் ஆயினவோ ...?
No comments:
Post a Comment