நிசப்தமாய் உறங்கும் வீதிகளினூடே படரும் பனிப் பிரவேசம்
மையல் கொண்ட என் மீது படரும் உன் மோகம் !
அஸ்தமிக்கும் நிலவுக்கு வெள்ளைப் போர்வை நீட்டும் முன்பனி
உறங்கையில் காதுவரை போர்த்தும் உன் கரங்கள் !
எழும் சூரியனோடு ஊடி அதனை ஒளிர விடாமல் செய்யும் மூடுபனி
புணரும் முன் என்னோடு போரிடும் உன் விரல்கள் !
இரவையும் பகலையும் இணைப்பதாய் தோன்றும் சாம்பல் நிற வானம்
எந்நேரமும் என்னாடை உற்று நோக்கும் உன் விழிநிறம் !
இடையிடையே தலையாட்டி சோம்பல் முறிக்கும் சருகுதிர்க்கா மரங்கள்
கனவினூடே விழித்து சேர்த்துக் கொள்ளும் உன் தோள்கள் !
சிறகுகள் மூடி பறவைகளையும் சிலநேரம் துயில் நீடிக்கச் செய்யும் வானிலை
இதமாய் என்னை அணைத்து கதகதப்பூட்டும் உன் ஸ்பரிசம் !
No comments:
Post a Comment