உன்னைப் பற்றி எழுத நினைக்கையில்
அருகருகே அமர்ந்தும் தீராத மோகம் !
கையசைத்து விடைப்பெற்று பிரிகையில்
தலை மறைந்தும் தீராத தேடல் !
தினம் பலமுறைப் பேசி துண்டிக்கையில்
முத்தம் ஈந்தும் தீராத ஏக்கம் !
இதயத் துடிப்பு அடங்க அணைத்தும்
விரல் கோத்தும் தீராத தாகம் !
இதழ் சேர்த்ததும் தீர்ந்திடதான் தவமிருக்கிறதோ ?
No comments:
Post a Comment