February 8, 2012

காதல் கிருமி

மின்தொடர்வண்டிக்கான வரிசையில் ஆடை மட்டும் தீண்டிக் கொள்ள ,
ஜன்னலோரக் காற்று குளிர் கூட்ட உன் அருகாமையோ வெப்பமேற்ற ,
இணைந்து நடக்கையில் தற்செயலாய் விரல்கள் கொத்துச் செல்ல ,
இருள் கவ்விய மணல் பரப்பில் தாகம் தணியா தோள்களை நீ பற்ற ,
விண்மீன் நான் வெறித்திருக்க உன் இதழ்களோ என் கன்னம் தொட ,
விரல்கள் அங்கங்கு விளையாடி உணர்வு தின்று பசியாறிக் கிடக்க ,
அப்பொழுதுதான் உணர்கிறேன் காதலும் ஒரு உயிர்க் கொல்லிக் கிருமியென ...


No comments:

Post a Comment