புதன்
உன் அருகாமை வெய்யோனாய் உஷ்ணம் உமிழ்ந்தாலும் உனையே விழையும் நான்
வெள்ளி
நீ ரசிக்கும் நிலவுக்குப் போட்டியாய் என் வானப் பிரவேசம் மாலை நட்சத்திரமாய்
புவி
உன் கரிவளி நான் உள்ளிழுக்கும் உயிர்வளியாக வகைசெய்த வளிமண்டலம்
செவ்வாய்
தூக்கமின்றி சிவந்த பொழுதுகளிலும் அழகாய் கவிதைகள் சொல்லும் உன் விழி
வியாழன்
உன் தற்காலிக பிரிவுகளில் கற்பனைக்கெட்டா கனம்கொள்ளும் என் இதயம்
சனி
வளையமாய் என்னை வளைத்துப் பற்றும் உன் கரத்தில் சிக்கித் தடுமாறும் தேகம்
யுரேனஸ்
எனக்கு வடக்குத்தெற்காய் தோன்றுவதெல்லாம் உனது நெற்றியும் பாதமும்
நெப்ட்யூன்
வெகுதொலைவில் நீ என்றாலும் உன் நினைவுகளையே சுற்றித் திரிகிறேன்
கோளொத்த பண்புகள் உன்னிடமும் என்னிடமும் நம் காதலிடமும் ... !
No comments:
Post a Comment