February 7, 2012

அம்புலி உலா !


கடற்கரை மணலில் என் காலணிகளை நீ சுமக்க
நானோ உன் காதலை சுமந்து வந்தேன் !
அனுமதியின்றி பாதம் தொடும் நுரைகளை நீ வெறுக்க
அனுமதியோடு கரம் பற்றிய உன்னை நான் நேசித்தேன் !
நிலவொளியை விழுங்கும் அலைகளை நீ ரசிக்க
என் நாணம் வெளிக்கொணரும் உன்னை நான் ரசித்தேன் !
இரவெல்லாம் இருந்திருப்பேன் ஆனால்
உன் காதல் கொள்ளாமல் இதயம் திணறி விட்டேன் ! 
ஏழு நாழிகை நீண்ட நெருக்கமும் .....
ஆறாம் அறிவின் கிறக்கமும் ...
ஐம்புலன்களின் மயக்கமும்...
நால்வகை பண்புகளும் ...
மூவெட்டு அகவையும் ...
இருவரிக் கவிதையும் ...
ஒற்றைப் பூஞ்சிரிப்பும்..
உனை நீங்கியதும் ஏனோ அர்த்தம் இழந்ததடா....
பாதம் படிந்திருந்த கடற்கரை மணல் உதறிவிட்டேன் ...
என்னுள்ளத்தில் தொற்றிக் கொண்ட உன் நினைவுகளை என் செய்வேன் ...

No comments:

Post a Comment