December 10, 2011

வெறுமை

பள்ளிக் காலங்களில் பார்வைகள் பகிர்ந்தாய்...

கல்லூரி நாட்களில் குறுஞ்செய்திகள் தொடுத்தாய்...

அலுவல் நேரங்களில் தொலைபேசியில் தொடர்ந்தாய்...

அத்தனையும் தொலைத்து தனிமையில் நானிருக்கும்போது மட்டும்

ஏன் இந்த வெறுமையை பரிசளிக்கிறாய் ?

விலகிச் சென்றாலும் விடாமல் நீளும் உன் பிரிவு ....

பிரிந்து சென்றாலும் பிரியாமல் உலுக்கும் உன் நினைவு 

நினைவில் கொண்டாலும் தொடரும் உன் கனவு ....

கனவு கலைந்ததும் தலையணை நனைக்கும் கண்ணீர்....

என உன் பரிசுகளின் எண்ணிக்கை நீண்டு கொண்டே போகிறது ...

இத்துடன் நிறுத்திக்கொள் நான் நிறைந்து விட்டேன் .....

No comments:

Post a Comment