தனியாக நடந்து செல்கையில் கண்சிமிட்டும் தெரு விளக்கு
உன்னோடு வரும் பொழுது ஏனோ கண்மூடிக் கொள்கிறதே
ஒற்றையாய் நடக்கும் பொழுது ஒளிந்துக் கொள்ளும் மேகம்
ஒன்றாய் நடக்கையில் மழைக்கரம் நீட்டுகிறதே
நம்மை ஒரேக் குடையில் இணைக்கவோ ?
நான் மட்டும் சென்றால் உடனே வரும் பேருந்து
இருவரும் சென்றால் தாமதம் செய்கிறதே
நம் காதல் நொடிகளை வளர்க்கவோ ?
No comments:
Post a Comment