நீ இதமாய் காதலிக்கிறேன் என சொல்லத் தேவையில்லை ...
உன் இதயத்தின் ஓசை உணர்கிறேனடா...
உன் பார்வையே உயிருள்ள கவிதையடா ...
நீ பிறந்தநாள் வாழ்த்து சொல்லத் தேவையில்லை ...
நான் பிறந்ததே உனக்காகத் தானடா...
நீ விதவிதமாய் பரிசுகள் தரத் தேவையில்லை ...
நான் விரும்பும் பரிசே நீதானடா ...
நீ என்னைக் காதலிக்கத் தேவையில்லை ...
உன்னை விரும்புவதால் நானே என்னைக் காதலிக்கிறேன்...
No comments:
Post a Comment