இதயம் வருடிப் போன உன் கண்கள்
குளிர் நிரம்பிய காற்று
குதூகலமூட்டும் உன் விரல்கள்
மழைக் கொட்டும் மேகம்
மனதில் நீ விதைத்துப் போன மோகம்
ஜன்னலோரச் சாரல்
இடைவிடாத உன் உரையாடல்
மரமுதிர்க்கும் துளிகள்
நீ உதிர்க்கும் புன்னகை
என்று என்னைத் தொடரும் அனைத்தும் நீயாகவே தோன்ற
முழுதாய் நனைகிறேன் மழையில் !!!
No comments:
Post a Comment