January 26, 2011

கடவுச் சொல்


முதலாமாண்டு

நான் கல்லூரியில் சேர்ந்த நாள் ஞாபகத்தில் இல்லை... ...

உன்னைக் கண்ட நாளை எண்ணி அவ்வப்போது சிரித்திருக்கிறேன் ....

இரண்டாமாண்டு  

உன்னிடம் பிறந்த நாள் வாழ்த்து சொன்னதில்லை....

உன் பிறந்த நாளன்று கடவுளிடம் கோரிக்கைகள் வைத்திருக்கிறேன் ...

மூன்றாமாண்டு 

உன் கைபேசிக்கு குறுஞ்செய்தி தொடுத்ததில்லை....

உன் கைபேசி எண் மட்டும் கண்டுபிடித்து நினைவில்கொண்டிருக்கிறேன்.......

நான்காமாண்டு

கல்லூரி வகுப்பறையில் கடைசி வரிசையில் அமர்ந்ததில்லை ..

முதல் வரிசையிலிருந்து கொண்டு உன்னை முகம் திருப்பி ரசித்திருக்கிறேன்

முதல் நாள் நீ தந்த பார்வை மின்சாரத்தை ஏனோ .....

நான்காண்டு மின்னும் மின்னணுவியலும் கடைசி வரை உணர்த்தவேயில்லை

இன்று

ஆம் !!! நீ கனவு போல் என்னை கடந்து சென்று விட்டாய் ..

கடவுச் சொல் மட்டும் உன் பெயர் சுமந்து கனக்கிறது....

No comments:

Post a Comment