உனக்காக சேர்த்து வைத்த வண்ணங்களை
வானவில் கேட்டதும் வாரிக் கொடுத்துவிட்டேன் !
உனக்காக சேகரித்து வைத்த துளிகளை
மேகம் கேட்டதும் அள்ளிக் கொடுத்துவிட்டேன் !
உனக்காக கோத்து வைத்த விண்மீன்களை
வானம் கேட்டதும் விட்டுக் கொடுத்துவிட்டேன் !
உனக்காக காத்திருக்கும் உயிரை மட்டும்
பாதுகாத்து வைத்திருக்கிறேன் !
நீ காதலனானவுடன் பரிசளிக்க........
No comments:
Post a Comment