ஆளில்லா சாலைகளில் அடிக்கடி நடந்து சென்றோம் - காதலிக்கையில்
இன்றோ மக்கள் நிரம்பி வழியும் சாலையும் அரவமற்று தெரிகிறது
நான் உன்னுடன் நடப்பதால் ....
ஒளிதீண்டா மரங்களிடையே அமர்ந்து பேசினோம் -காதல் புரிகையில்
இன்றோ இலையுதிர்ந்த மரம் கூட நமக்காக நிழல் விரிக்கிறது
நான் உன்னருகில் இருக்கையில் ....
ஒருநாளில் ஒருமுறையாவது சந்திக்க நினைப்போம் - காதலில்
நான் உன்னில் கலந்ததால் .....
காலங்கள் விரைவாக நகர்ந்தாலும்
காதல் மட்டும் கூடிக்கொண்டே செல்கிறது ....
அன்று உன் காதலில் திளைத்திருந்தேன் ....
இன்றோ உன்னைக் கணவனாய் ரசிக்கிறேன் ....
என் வாழ்வை வளமாக்கிய உன்னை என் வரமாய்
நினைக்கிறேன் .....
No comments:
Post a Comment