இடை இறுக்கி ,
நெற்றி பரவும் கற்றைமுடி நீக்கி ,
ஆசையாய் கொடுக்கும் நீ கொடுக்கும் முத்தத்தில்
தொடங்க வேண்டும் தினமிரவு ......
காலை அரைத் தூக்கத்தில் எழுந்து ,
எனை அணு அணுவாய் அளந்து ,
அழகாய் நீ கொடுக்கும் முத்தத்தில் ,
தொடங்க வேண்டும் அன்றையப் பொழுது .....
என நான் கனவுகள் கண்டு கிறங்கிக் கிடக்குமாறு
மனம் கொத்திச் சென்றாயடா !
No comments:
Post a Comment