கூட்டலில் பதினொன்றாவதாக நான் எண்ணிக் கொண்ட உன் விரல்,
விழுந்துவிடக் கூடாதென்று நான் பிடிக்கத் தொடங்கிய உன் விரல் ,
உடைந்து விடும் பொழுதுகளில் என் தலை கோதிய உன் விரல்,
நான் விம்மி அழும்போது என் விழி துடைத்த உன் விரல் ,
உன் முகம் கண்டால் நகம் இழக்கும்
உன் விழி கண்டால் முகம் மூடிக் கொள்ளும்
உன் நினைவுகள் எண்ணி கவிதைகள் கிறுக்கும்
உன் புன்னைகையில் தரையெங்கும் கோலமிடும்
இணையுமோ இவையிரண்டும் ....
No comments:
Post a Comment