கண்மூடிக் கிடந்தாலும் கருவில் வாழும்
கடவுளின் துளியைப் பற்றியே கனவு காண்பாள் !
கடவுளின் துளியைப் பற்றியே கனவு காண்பாள் !
மண் தொட்டதும் மழலையின் உச்சிமுகர்ந்த பின்னரே
பண்பட்ட நிலமாய் குழவியைத் தாங்கி செந்நீரைத் திரித்து
பாசமிகு பாலாய்க் கொடுப்பாள் !
விண்வெளியை சோதிக்கும் உலகில் அவள் பிள்ளைக்கு
நிலவைக் காட்டி அமுதூட்டுவாள்!
எண்ணிலடங்கா கற்பனைகள் வளர்த்து கதைகள் சொல்லி
குழந்தையை தூங்கச் செய்வாள் !
தண்மையும் வெம்மையும் தான் தாங்கிக் கொண்டு தன்
வாரிசைக் கருத்தாய்க் காத்திடுவாள் !
பெண்மையின் பெருமையெல்லாம் ஒன்றாய்ப் பெற்ற
அவளைத் தாயென்று கூறினால் தவறாகக் கூடும் !!!
தெய்வமென்று சொன்னால் மட்டுமே தகும் !!!!!
No comments:
Post a Comment