
உன்னில் உறைந்து நிற்கிறதே வண்ணம் , அதனிடமா.. ?
உன் வருகைக்காக காத்திருக்கிறதே தேன் , அதனிடமா.. ?
உன்னால் தாகம் தீர்த்து கொள்கிறதே மலர் , அதனிடமா.. ?
உன்னோடு சுற்றித் திரிகிறதே அந்த காற்று , அதனிடமா.. ?
உன்னிடம் மோகம் வளர்த்துப் போகிறதே மகரந்தம் , அதனிடமா ..?
வட்டமிடும் பட்டாம்பூச்சியே .... உன் காதல் யாரிடம்... ?
No comments:
Post a Comment