August 14, 2011

இந்தியர் நாங்கள் !!!


ஒன்றுபட்டு நாங்கள் வீழ்ந்திடாது வாழ்ந்திடுவோம் ......
இரண்டில் ஒன்று பார்த்திடுவோம் எல்லைப்போர்களை....
மூன்று நிறக் கொடியில் வெண்மை எங்கள் மனத்தின் நிறம் ....
நான்கு திசைகளும் வியக்க  ஒற்றுமை ராகம் இசைத்திடுவோம்....
ஐந்து புலன்களையும் இந்தியத்  திருநாட்டிற்கு அற்பணித்திடுவோம்...
ஆறாம் அறிவுக்கு எட்டாத கல்வியையும் கலைகளையும் கற்றிடுவோம்...
ஏழாம் பிறவியெடுத்தாலும் இந்தியநாட்டில் பிறந்திடவே விழைந்திடுவோம் .....
எட்டாவதாக ஒரு கண்டம் அமைத்து இந்தியர்கள் மட்டும் அங்கு குடிபுகுவோம்...
ஒன்பது கோள்களை வணங்கவும் செய்வோம் அவற்றின் இயக்கமும் அறிவோம் ...
பத்தாம் கோளொன்றில் புதிதாய் பாதம் பதித்து அங்கும் பசுமைப்புரட்சி செய்வோம்...  
  

No comments:

Post a Comment