August 2, 2011

தூக்கம்


தூக்கம் இல்லாமல் தவிக்கும் தேர்வுக்கு முதல் நாள்

தூக்கம் தொலைந்த இரவில் ஒலிக்கும் தூரத்து இசை


தூக்கம் கலைக்கும் விதமாக வரும் வினோதக் கனவு

தூக்கம் இல்லா கடலுக்கு துணைசெல்லும் கலங்கரை

தூக்கம் வந்தாலும் சமாளிக்க வேண்டிய ஆசிரியர் உரை

தூக்கம் வரச் செய்யும் பேருந்தும் ஜன்னலோரக் காற்றும்

தூக்கம் வர கையகப் படுத்திக் கொள்ளும் 400 பக்க நாவல் 

தூக்கம் தேடும் குழந்தைக்கு பரிசாகக் கிடைக்கும் தாலாட்டு

தூக்கக் கலக்கத்தில் தோன்றுகின்ற அரைப்பக்க கவிதை

அத்தனையும் நீயாகிப் போனாயடா .......

இனி நான் எங்ஙனம் தூங்குவேன் ?

No comments:

Post a Comment