November 25, 2017

அந்தாதி

கனம் உன்னை பிரிந்தாலும் 
கனம் கூடுதே மனம் 

மனம் உன்னை நினைத்தாலும் 
மணம் கூடுதே காற்றில் 

காற்றில் கூந்தல் கலைந்தாலும் 
கரம் தேடுதே கண்கள் 

கண்கள் என்மேல் பட்டாலும் 
காதல் தேடுதே இதயம் 

இதயம் இரண்டும் இணைந்தாலும் 
இதழ்கள் கேட்குதே  முத்தம் 

முத்தம் நூறு வைத்தாலும் 
முழுமையடையவில்லையே !

நம் காதலும் அந்தாதிதான் 
முடிந்த  இடத்திலேயே தொடங்குகிறது !!!!

No comments:

Post a Comment