கனம் உன்னை பிரிந்தாலும்
கனம் கூடுதே மனம்
மனம் உன்னை நினைத்தாலும்
மணம் கூடுதே காற்றில்
காற்றில் கூந்தல் கலைந்தாலும்
கரம் தேடுதே கண்கள்
கண்கள் என்மேல் பட்டாலும்
காதல் தேடுதே இதயம்
இதயம் இரண்டும் இணைந்தாலும்
இதழ்கள் கேட்குதே முத்தம்
முத்தம் நூறு வைத்தாலும்
முழுமையடையவில்லையே !
நம் காதலும் அந்தாதிதான்
முடிந்த இடத்திலேயே தொடங்குகிறது !!!!
No comments:
Post a Comment