June 20, 2017

மழைத் தொடர்பு



பெய்யத் தொடங்கியதும் எழும் மண்வாசனை இல்லை

பெய்து முடித்ததும்  குப்பை மணத்துக்கு குறைவில்லை  

நனைவதற்கு மரங்களோ திளைப்பதற்கு குருவிகளோ இல்லை

ஏந்திக்கொள்ள மாடிகளும் அடைக்க  ஜன்னல்களும் உண்டு  

மண்குடித்த மிச்சத்தை சேகரிக்க  குளங்கள் இல்லை

கடைசியாய் கடலில்  சேர சாக்கடைகள் பலவுண்டு  

வானம் பார்த்து செய்திருந்த விவசாயம் இல்லை 

வசதியாய்  வாழ  வானிலை அறிக்கைகள் எக்கச்சக்கம் 

ஓடுகளில்  வழியும் மழைநீர் பிடிக்க குடங்கள் இல்லை 

மழையில்லா ஊரில்  மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் உண்டு

மழை நின்றதும் காகிதக் கப்பல்  விடும்  மழலைகள் குறைவு 

விடுமுறைக்காக  மழையை வேண்டும் குழந்தைகள் ஏராளம் 

மழைக்கும் மனிதனுக்குமான தொடர்பு மாறிவிட்டது 

மனங்கள் மட்டும் இன்னும் மழை ரசிக்க விழைகிறது ......

 

No comments:

Post a Comment