பெய்யத் தொடங்கியதும் எழும் மண்வாசனை இல்லை
பெய்து முடித்ததும் குப்பை மணத்துக்கு குறைவில்லை
நனைவதற்கு மரங்களோ திளைப்பதற்கு குருவிகளோ இல்லை
ஏந்திக்கொள்ள மாடிகளும் அடைக்க ஜன்னல்களும் உண்டு
மண்குடித்த மிச்சத்தை சேகரிக்க குளங்கள் இல்லை
கடைசியாய் கடலில் சேர சாக்கடைகள் பலவுண்டு
வானம் பார்த்து செய்திருந்த விவசாயம் இல்லை
வசதியாய் வாழ வானிலை அறிக்கைகள் எக்கச்சக்கம்
ஓடுகளில் வழியும் மழைநீர் பிடிக்க குடங்கள் இல்லை
மழையில்லா ஊரில் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் உண்டு
மழை நின்றதும் காகிதக் கப்பல் விடும் மழலைகள் குறைவு
விடுமுறைக்காக மழையை வேண்டும் குழந்தைகள் ஏராளம்
மழைக்கும் மனிதனுக்குமான தொடர்பு மாறிவிட்டது
மனங்கள் மட்டும் இன்னும் மழை ரசிக்க விழைகிறது ......
No comments:
Post a Comment