உன் வண்ணக்கனவுகளைச் சுமந்திட்ட இரவுகள் மட்டுமே முடிகிறது இன்று ....
உன் எண்ணங்கள் உயர்ந்திட விரியட்டும் வானம் என்றும் ...
உன் அருகாமையை உணர்ந்திட்ட நாழிகைகள் மட்டுமே முடிகிறது இன்று ....
உன் நினைவுகளைத் தீண்டும் நேரங்கள் நீளட்டும் என்றும் ...
உன் நட்பின் ஆழத்தால் உருவான பாதைகள் மட்டுமே மாறுகிறது இன்று .....
உன் உள்ளத்தோடு கொண்ட பயணம் தொடரட்டும் என்றும் ...
தொய்வுற்றபோழுதுகளில் தோள் சேர்த்துக் கொண்ட தோழியே ....
உன் தொலைதூரப் பயணத்திற்கு பிரியாவிடையளிக்கிறேன் .....
No comments:
Post a Comment