கரைதுடைக்கப்பட்ட தூரத்து வானம் !
கால்கள் நனைத்துச் செல்லும் கடலலை !
கிளிஞ்சல்கள் விட்டுப் போகும் கடல் நுரை !
கீறல் பாத்திரத்தில் சுண்டல் விற்கும் சிறுவன் !
குடைக்குள்ளே களவுக்காதல் புரியும் காதலர்கள் !
கூன் விழுந்த முதுகோடு குறிசொல்லும் முதியவள் !
கெஞ்சலாய்த் தொடங்கும் முத்தத்திற்கான விண்ணப்பம் !
கேட்டும் கிடைக்காததால் சிறியதாய் ஒரு செல்லக் கோபம் !
கைகள் கோத்துக் கொள்ள வாய்ப்பளித்த இரண்டுமணி நேரம் !
கொட்டுமருவியாக உன் இதழ்கள் உதிர்க்கும் காதல் கவிதைகள் !
கோலமிட்டபடி என்னை உரசும் உன் விழியில் வழிந்தோடும் காதல் !
No comments:
Post a Comment