May 29, 2011

கடற்கரைக் காதல் !

ரைதுடைக்கப்பட்ட தூரத்து வானம் !

கால்கள் நனைத்துச் செல்லும் கடலலை !

கிளிஞ்சல்கள் விட்டுப் போகும் கடல் நுரை !

கீறல் பாத்திரத்தில் சுண்டல் விற்கும் சிறுவன் !

குடைக்குள்ளே களவுக்காதல் புரியும் காதலர்கள் ! 

கூன் விழுந்த முதுகோடு குறிசொல்லும் முதியவள் !

கெஞ்சலாய்த் தொடங்கும் முத்தத்திற்கான விண்ணப்பம் !

கேட்டும் கிடைக்காததால் சிறியதாய் ஒரு செல்லக் கோபம் !

கைகள் கோத்துக் கொள்ள வாய்ப்பளித்த இரண்டுமணி நேரம் !

கொட்டுமருவியாக உன் இதழ்கள் உதிர்க்கும் காதல் கவிதைகள் !

கோலமிட்டபடி என்னை உரசும் உன் விழியில் வழிந்தோடும் காதல் !
  

No comments:

Post a Comment