June 15, 2011

கோடை மழை

குளிர்கால காலையில் வெந்நீர் குளியல் முடித்து

நீ சிறு புன்னகையுடன் தலை சிலிர்க்கும் பொழுது

என் மீது சிதறும் துளிகளாக எண்ணிக் கொண்டு

கோடைக் கால குளிர்மழைத் துளிகளில்

குடை விடுத்து நடந்தேன்...நேற்று ...

மழை விட்டதும் மறைந்துவிட்டது மண்ணின் ஈரம் ....

ஆனால் உன் நினைவுகளால் விழிகளில் ஈரம்.....

இன்னும் மாறாமல் .....

No comments:

Post a Comment