February 20, 2011

பரிதவிப்பில் முடிந்த பட்டமளிப்பு விழா

பட்டம் வாங்க வந்த என் மனதை பட்டமாக்கிவிட்ட உன்

பட்டாம்பூச்சி விழிகளுக்கு சொல்லிவிட்டாயா ?

நான் உன்னை காதலிப்பதை

உயிர்வளி உள்ளிழுக்கும்போது திணறச் செய்யும் உன்

காதல் சுவாசத்திற்கு சொல்லிவிட்டாயா ?

நான் உன்னை நேசிப்பதை

நான் சொல்லிவிட்டேன் என் இதயத்திடம் ......

அவன் உனக்கில்லை என்று .....

ஆனால் .....

நான்காண்டு கல்லூரியில் உன்னை மட்டும் தேடிய என் விழிகள் ...

ஆய்வகத்தில் உன் அருகாமையை உணர்ந்த என் உணர்வுகள் ....

வகுப்பறையில் உன் ஆற்றலை கண்டு வியந்த என் உள்ளம் ...

இவையனைத்தும் ஏற்க மறுக்கின்றன உன் நிரந்தர பிரிவை ....

No comments:

Post a Comment