நீ பனிக்கூழ் சாப்பிடும் பொழுது உருகுவது
அது மட்டுமல்ல நானும்தான் !
------------------------------------------------------------------------------
விழி முழுவதும் காதல் இருப்பதால் கொஞ்சம்
மங்கலாகத் தெரிகிறது நம் நட்பு !
----------------------------------------------------------------------
கரம் கோத்து இருவரும் நெருங்கும் நேரம்
தொலைவது இடைவெளியல்ல இதயம் !
----------------------------------------------------------------------------------
வழி மாறி நடப்பது கூடத் தெரியவில்லை எனக்கு
உனது விழி பார்த்து நான் நடக்கையில் !
-----------------------------------------------------------------------------------------------
விரல் நுனியில் உன் கைபேசி என்னைத் தட்டும் பொழுது
விரல்களில் பற்றிக் கொள்கிறது நாணம் !
------------------------------------------------------------------------------------------------------------
உணவகத்தில் என்ன வேண்டும் என என்னைக் கேட்கும்பொழுது
உன்னை எண்ணத் தோன்றும் எனக்கு !
------------------------------------------------------------------------------------------------------------------------------
விடியலின் பொழுது உன் குரல் கேட்க எண்ணி கைபேசியை துளாவும் போது
அழகாய் சிணுங்குகிறது உன் அழைப்பில் !
--------------------------------------------------------------------------------------------------------------------------------
உயிரோட்டத்துடன் உனக்கொரு பரிசளிக்கலாம் என்று நினைக்கும் பொழுதே
என்னைக் கொடு என்று இம்சிக்கிறது என் இதயம் !
--------------------------------------------------------------------------------------------------------------------------
உன் பேருந்து வரக்கூடாதென்று நானும் என் சிற்றுந்து வரக்கூடாதென்று
நீயும் நினைக்கும் பொழுது வருகிறது இரண்டும் !
No comments:
Post a Comment