July 24, 2020

ஒட்டடை


விட்டத்தின் தனிமையை தணிக்க வந்தாயோ ?

வீட்டின் வெறுமையை விலக்க வந்தாயோ ?

எட்டுகால்களினால் செதுக்கப்பட்ட  எட்டாச் சிற்பமோ ?

எட்டிப் பிடிக்க ஒற்றைக்கோல் வேண்டுமோ ?

ஒட்டி உறவாட உயரம்தான் விருப்பமோ ?

"ஒட்டடை உனக்கும் என் மீது காதலோ ?

அடிக்கடிதோன்றி இம்சிக்கிறாயே !!!"

2 comments:

  1. ரசனையே வாழ்வை ரம்மியமானதாக்கிறது. ஒட்டடை கூட ரசனைக்குரியதே என்பதை மனதில் ஒட்டும்படி கவித்த கவிதை ரசிகைக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete