July 27, 2020

பெருங்கொடையே !

வார்த்தைகளை வரையறையோடு விடுவிக்கிறாய் !

வாசனைகளையும் வடிகட்டி என்னுள் சேர்க்கிறாய் !

என் புன்னகைகளை பிறர் ரசிக்க நீ விடுவதில்லை 

நான் தனித்திருப்பதை தவிர்க்க 

உனை நான் நீங்குவதுமில்லை !

உதடு பொருத்தினாய்
 
கன்னம் தழுவினாய்

காதுமடல் வரை நீள்கிறாய் ! 

என் காதலனின் குணமனைத்தும் உனக்கும் இருப்பதால்

உன்னையும் காதலிக்க தொடங்கிவிட்டேன் !

கொரோனா கொடுத்த பெருங்கொடையே - என் முகக்கவசமே !


No comments:

Post a Comment