வாசனைகளையும் வடிகட்டி என்னுள் சேர்க்கிறாய் !
என் புன்னகைகளை பிறர் ரசிக்க நீ விடுவதில்லை
நான் தனித்திருப்பதை தவிர்க்க
உனை நான் நீங்குவதுமில்லை !
உதடு பொருத்தினாய்
கன்னம் தழுவினாய்
காதுமடல் வரை நீள்கிறாய் !
என் காதலனின் குணமனைத்தும் உனக்கும் இருப்பதால்
உன்னையும் காதலிக்க தொடங்கிவிட்டேன் !
கொரோனா கொடுத்த பெருங்கொடையே - என் முகக்கவசமே !
No comments:
Post a Comment